Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (09:27 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் டெல்லி அணி முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இழந்து தடுமாறியது. அதனால் போட்டி முழுவதும் லக்னோ கைவசம் இருந்தது. ஆனால் இம்பேக்ட் ப்ளேயராகக் களமிறங்கிய அஷூடோஷ் ஷர்மா வான வேடிக்கைக் காட்டி வெற்றியைத் தட்டிப்பறித்தார். இந்த போட்டியின் இறுதி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் மோஹித் ஷர்மா அஷூடோஷுக்கு ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுத்தார்.

இந்த சிங்கிள் குறித்துப் பேசியுள்ள பாஃப் டு பிளஸ்சி “மோஹித் ஷர்மா எடுத்த அந்த சிங்கிள் அவரது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். அந்த சிங்கிள் 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 438 ரன்களைத் துரத்திய போது மக்காயா நிட்டினி எடுத்த சிங்கிளை நினைவுபடுத்தியது” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments