Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சிறந்த அணி என்றால்… இதை செய்ங்க –சவாலுக்கு அழைக்கும் முன்னாள் பாக். வீரர்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (14:10 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், அதன் பின்னர் நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. ஆனால் அந்த போட்டி கூட ஒரு தலைபட்சமாக உப்புச்சப்பில்லாமல் இந்தியாவின் ஆதிக்கத்தோடுதான் நடந்து முடிந்தது. பல முன்னாள் வீரர்கள் இந்தியாவுக்கு சமமான வலுவான அணியாகப் பாகிஸ்தான் இல்லை எனக் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் சக்லைன் முஷ்டாக் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் “இந்தியா பலமிக்க அணி என்றால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் 10 போட்டிகள் மோதட்டும். அதன் பின்னர் எந்த அணி சிறந்தது என்பது தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments