டி 20 கிரிக்கெட்டின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்து இமாலய வெற்றி!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (09:20 IST)
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 234 ரன்கள் சேர்த்து அசத்தியது. சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து அணி சார்பாக பேர்ஸ்டோ 90 ரன்களும் மொயின் அலி 52 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments