6 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்து வீரர் சாதனை!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:17 IST)
கடந்த 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு,  பாகிஸ்தான் நாட்டிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவில்லை.

இந்த நிலையில், 17 ஆண்டடுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இன்று, ராவல்பிண்டியில்  தொடங்கிய டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் கேப்டனாக இருந்தார். இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருந்தார்.

எனவே, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் தொடரில் முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்சம் ரன்  இதுவாகும்.

இதில், பாகிஸ்தான் விரர் சவுத் ஷகீல் பந்து வீசினார், அப்போது பேட்டிங் செய்த ஹாரி புரூக், ஒரு ஓவரின் 6 பந்துகளிலும்  பவுண்டரி அடித்து அசத்தினார்.

எனவே ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து, 24 ரன்கள் எடுத்த 5 வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments