ஆஷஸ் தொடர்… இரண்டாவது நாளில் அதிரடி காட்டிய இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:28 IST)
நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தங்கள் அதிரடி ஆட்டமான பாஸ்பால் ஆட்டமுறையை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட்ர் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹேரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸி அணியை விட 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்.. ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட துரதிஷ்டம்..!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்.. திடீரென விலகிய ரிஷப் பண்ட்.. என்ன காரணம்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பயிற்சியில் விராத் கோஹ்லி..!

ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments