ஆஷஸ் தொடர்… இரண்டாவது நாளில் அதிரடி காட்டிய இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:28 IST)
நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தங்கள் அதிரடி ஆட்டமான பாஸ்பால் ஆட்டமுறையை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட்ர் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹேரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸி அணியை விட 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments