Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து

பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து
, வியாழன், 22 மார்ச் 2018 (16:30 IST)
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில்  நடைபெற்று வரும் பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து அணி.
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கியது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஒவர்களில் 58 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக போல்ட் 6 வீக்கெட்டுகளையும், சவுத்தி 4 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 
webdunia
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 வீக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 58 ரன்கள் எடுத்து தனது 6-வது குறைந்தபட்ச ஸ்கொரை பதிவு செய்துள்ளது. இதே மைதானத்தில் 1995-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை 28 ரன்களை சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரபாடாவின் தடை நீக்கம் கூறுவது என்ன? ஸ்மித் சாடல்...