Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து… பாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (17:00 IST)
ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது .

அதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்றது.  பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஆஸி அணி ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் இழந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments