சி எஸ் கே வீரர்களுக்கு அணி உரிமையாளர்களிடம் இருந்து அழுத்தமா? பிராவோ கூறிய பதில்!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:18 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் பௌலிங் பயிற்சியாளரான டுவெய்ன் பிராவோ சி எஸ் கே வீரர்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “சில அணிகளில் சரியாக விளையாடாத  வீரர்களுக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து அழுத்தம் வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் சி எஸ் கே அணியில் அதுபோல எந்த புற அழுத்தமும் வீரர்களுக்கு இருக்காது. அதுதான் சி எஸ் கே அணியின் சிறப்பே.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments