Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த வீரர்கள் ஐபிஎல் விளையாடலாமா? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:51 IST)
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் என இரண்டு பெரிய தொடர்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அதிக போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயம் அடைவது சம்மந்தமாக நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் முன்னணி வீரர்கள் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கும் படி ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் என்சிஏ ஆகியோரை இணைந்து கண்காணிக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “காயம் குறித்த அச்சம் இல்லாதவர்கள் தாராளமாக ஐபிஎல் தொடரில் விளையாடலாம். டி 20 தொடர்களில் ரோஹித், கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments