Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த வீரர்கள் ஐபிஎல் விளையாடலாமா? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:51 IST)
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் என இரண்டு பெரிய தொடர்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அதிக போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயம் அடைவது சம்மந்தமாக நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் முன்னணி வீரர்கள் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கும் படி ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் என்சிஏ ஆகியோரை இணைந்து கண்காணிக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “காயம் குறித்த அச்சம் இல்லாதவர்கள் தாராளமாக ஐபிஎல் தொடரில் விளையாடலாம். டி 20 தொடர்களில் ரோஹித், கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments