Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக்!

Advertiesment
முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக்!
, சனி, 30 ஜூலை 2022 (09:11 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில் நேற்று டி 20 தொடர் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்களை சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்க்க, தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பவுலர்களின் சுழலில் சிக்கி 8 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் ஆலோசனைகளை கோலி ஏன் கேட்க வேண்டும்?- பாகிஸ்தான் வீரர்