Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹிபால் வந்து சிக்ஸ் அடித்ததும் என் அழுத்தம் குறைந்தது… அதிரடி இன்னிங்ஸ் குறித்து தினேஷ் கார்த்திக்!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (07:45 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி கடைசி ஓவர் திரில்லராக நடந்து முடிந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் கோலி அவுட் ஆனதும் ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் சாய்ந்தது. அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் ரோம்ரார் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.

போட்டி முடிந்ததும் பேசிய அவர் “என் பேட்டிங் முழுவதுமாக கண்ட்ரோலில் இல்லை. ஆனால் மஹிபால் வந்து ஒரு சிக்சரை அடித்ததும் என் மீதான அழுத்தம் குறைய ஆரம்பித்தது. அவரிடம் அப்படியே விளையாடுமாறு கூறினேன். ஹர்சல் படேலின் மெதுவான பந்துகளை மிஸ் செய்யாமல் ஸ்கூப் செய்யவேண்டுமெனக் காத்திருந்தேன்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments