Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிகளை கிரிக்கெட் பேட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் சர்ச்சை! – மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (15:13 IST)
தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையில் தினேஷ் கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வரும் நிலையில் அந்த போட்டியை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக தொகுத்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது கிரிக்கெட் பேட்டை மற்றவர்கள் மனைவியுடன் அவர் தொடர்பு படுத்தி நகைச்சுவையாய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள தினேஷ் கார்த்திக் “நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. ” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments