Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் தோனி

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (10:47 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி துபாயில் பசபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்க இருக்கிறார்.


 

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணியில் தோனி தொடர்ந்து விளையாட வேண்டாம் என்ற கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர். 
 
இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி துபாயைச் சேர்ந்த பசபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளார். ஏற்கனவே சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments