Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இன்றைய போட்டியில் விளையாடுவது பற்றி சி எஸ் கே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (14:40 IST)
சி எஸ் கே அணிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் தலைமை பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தி செல்கிறார் தோனி. கடந்த ஆண்டு அவருக்கு பதில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொடரின் இறுதியிலேயே சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். அதனால் இந்த ஆண்டும் அவரே கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்த ஆண்டு தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜடேஜா அல்லது ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என தகவல்கள் பரவின.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் “தோனி இன்றைய போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments