Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் தோனிதான்… மூத்த வீரர் கருத்து!

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் தோனிதான்… மூத்த வீரர் கருத்து!

vinoth

, செவ்வாய், 19 மார்ச் 2024 (14:24 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் சி எஸ் கே உள்ளிட்ட 10 அணிகளும் தயாராகி வருகின்றனர். சி எஸ் கே அணிக்காக ஐந்துமுறைக் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் சீசனின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்குகிறார்

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சீசனில் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். அதனால் அவரால் அதிக நேரம் பேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லா இன்னிங்ஸ்களிலும் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இந்நிலையில் இந்த சீசன்தான் தோனி கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் கீழ் சி எஸ் கே அணிக்காக சில சீசன்கள் விளையாடிய ஃபாஃப் டு பிளசிஸ் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் தோனிதான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “சி எஸ் கே அணியில் அவருடன் இருந்த நாட்கள்தான் கேப்டன்சி பொறுப்பில் நான் இப்போது அடைந்துள்ள இடத்துக்கு உதவி செய்தது. அவர்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பும்ராவை சரிகட்ட புதுப் பொறுப்பை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்!