Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி கட்டாயம் அணிக்கு வெளியே உட்கார வேண்டும்; கவுதம் காம்பீர்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (11:18 IST)
தோனி நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியேதான் உட்கார வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.


 

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணிக்கு உலக கோப்பை வாங்கி கொடுத்தார் என்ற பெருமையை விட சிறந்த வீரர் என்பது முக்கியமானது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
 
தோனிக்கு தற்போது நெருக்கடி அதிகமாகியுள்ளது. கடந்த சில போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை என்று கூறி வருகின்றனர். அண்மையில் தேர்வு குழு தலைவர் பிரசாத், தோனி திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் என்று தெரிவித்தார்.
 
இதற்கு தோனியின் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது கவுதம் காம்பீர் தோனி குறித்து கூறியதாவது:-
 
2019ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் ஆட வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக நன்றாக விளையாட வேண்டும். யாராக இருந்தாலும் சரி அது தோனியாக இருக்கட்டும் மனீஷ் பாண்டேவாக இருக்கட்டும். தோனி இந்திய அணிக்காக நிறைய சாதனைகள் புரிந்தவர்.
 
ஆனால் அது பழைய கதை, நாம் நிகழ்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியேதான் உட்கார வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments