Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (23:41 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளின் கிளைமாக்ஸ் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டித்தொடரின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மோதியது



 
 
முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பெற்றுள்ளது
 
கடைசி 12 பந்துகளில் 22 ரன்கள் வெற்றி என்ற கடினமான இலக்கு இருந்த நிலையில் 19வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சை சரவணன் துவம்சம் செய்து இரண்டு சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments