Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவு.. காயத்தால் அவதிப்படும் வெளிநாட்டு வீரர்!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (08:17 IST)
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி அதற்காக தயாராகி வருகிறது. தோனி ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக இப்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் விலகும் பட்சத்தில் அது சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments