டிராவிட் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தது- அறிமுகப் போட்டி குறித்து தேவ்தத் படிக்கல் கருத்து!

vinoth
சனி, 9 மார்ச் 2024 (08:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இந்நிலையில் நேற்று பேட் செய்த அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமானது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் “இந்திய அணிக்காக விளையாட எப்போதும் தயாராக இருக்கவேண்டும் எனக் காத்திருந்தேன். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போது அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். பேட் செய்யும் போது ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸின் பந்துகள் ஸ்விங் ஆனதால் அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. ஆனால் இந்த பிட்ச்சில் முன்பே சில முறைகள் விளையாடி இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

அறிமுகப்போட்டியில் நமக்கு தெரிந்த மனிதர்கள் அருகில் இருந்தது நம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ’மகிழ்ச்சியாக விளையாடு” எனக் கூறியது ஆறுதலாக இருந்தது. அவுட் ஆகாமல் இன்று (நேற்று) முழுவதும் பேட் செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments