Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தது- அறிமுகப் போட்டி குறித்து தேவ்தத் படிக்கல் கருத்து!

vinoth
சனி, 9 மார்ச் 2024 (08:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இந்நிலையில் நேற்று பேட் செய்த அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமானது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் “இந்திய அணிக்காக விளையாட எப்போதும் தயாராக இருக்கவேண்டும் எனக் காத்திருந்தேன். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போது அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். பேட் செய்யும் போது ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸின் பந்துகள் ஸ்விங் ஆனதால் அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. ஆனால் இந்த பிட்ச்சில் முன்பே சில முறைகள் விளையாடி இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

அறிமுகப்போட்டியில் நமக்கு தெரிந்த மனிதர்கள் அருகில் இருந்தது நம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ’மகிழ்ச்சியாக விளையாடு” எனக் கூறியது ஆறுதலாக இருந்தது. அவுட் ஆகாமல் இன்று (நேற்று) முழுவதும் பேட் செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments