Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி… ஓய்வு குறித்து டீன் எல்கர் கருத்து!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:37 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரோடு தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு பற்றியும் நடந்து முடிந்த தொடர் பற்றியும் பேசிய அவர் “இந்த தொடர் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார்.  அவர் போன்ற ஒரு வீரரை எதிர்கொள்ளும்  போது நாம் நம்மையே சோதித்துக் கொண்டு நமது எல்லையை தாண்ட முயல வேண்டும்.

இனிமேல் என் வாழ்க்கையில் நான் பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பும்ரா அறிமுகமாகும் போது அந்த தொடரில் நானும் இருந்தேன் என நினைக்கிறேன். இருவரும் வெகுதூரம் கடந்துவிட்டோம். 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன்.  அன்று முதல் இன்றுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட நான் காயம் காரணமாக தவறவிடவில்லை என்பது சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments