Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி… ஓய்வு குறித்து டீன் எல்கர் கருத்து!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:37 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரோடு தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு பற்றியும் நடந்து முடிந்த தொடர் பற்றியும் பேசிய அவர் “இந்த தொடர் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார்.  அவர் போன்ற ஒரு வீரரை எதிர்கொள்ளும்  போது நாம் நம்மையே சோதித்துக் கொண்டு நமது எல்லையை தாண்ட முயல வேண்டும்.

இனிமேல் என் வாழ்க்கையில் நான் பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பும்ரா அறிமுகமாகும் போது அந்த தொடரில் நானும் இருந்தேன் என நினைக்கிறேன். இருவரும் வெகுதூரம் கடந்துவிட்டோம். 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன்.  அன்று முதல் இன்றுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட நான் காயம் காரணமாக தவறவிடவில்லை என்பது சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments