Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னரைத் தாக்கிய சிராஜின் பவுன்சர்… இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:54 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டு அபாயமான பவுன்சர்கள் வார்னரை கையிலும் ஹெல்மெட்டிலும் தாக்கின. இதையடுத்து அவர் தற்போது கன்கஷன் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவர் இப்போது பீல்டிங்கும் செய்யவில்லை. இது பற்றி பேசிய ஆஸி அணி வீரர் உஸ்மான் கவாஜா “அவர் மிகவும் சோர்வாக உள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் அறிவிப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments