Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
, வியாழன், 17 நவம்பர் 2022 (08:58 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எப்படியோ இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று, கோப்பையை இழந்தது. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா “கோலியின் தலைமையில் இந்தியா, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்ததும், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அணிக்கு தேவையான இடத்தில் விளையாடி கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால் பாபர் அசாம், அணிக்காக தனது இடத்தை மாற்றிக்கொண்டு நடுவரிசையில் இறங்க மறுக்கிறார். ஏனென்றால் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாட தெரியாது. அவருடைய பிடிவாதம் அணிக்கு ஆபத்தாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 உலகக் கோப்பைக்கு இப்பவே பயிற்சி தொடங்கியாச்சு… ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை!