Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்துராஜ், ரச்சின் அதிரடி அரைசதம்.. தோனிக்கு பில்டப் பாட்டு- மும்பையை வீழ்த்திய சி எஸ் கே!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (07:13 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் நேற்று ‘எல் கிளாசிகோ’ என சொல்லப்படும் சென்னை vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

வீரர்கள் வருவதும் விக்கெட்களை இழந்து செல்வதுமாக இருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட் செய்த சி எஸ் கே அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த போட்டி முடியும் நேரத்தில் தோனி களமிறங்கினாலும் அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்கவில்லை என்பது சி எஸ் கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments