பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை மாயம்… போலீஸ் விசாரணைக்குப் பின் கண்டுபிடிப்பு!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (08:08 IST)
இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவர் கேதர் ஜாதவ். ஐபிஎல் போட்டிகளில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்புகள் இல்லை.  இந்நிலையில் கேதர் ஜாதவின் தந்தை மகாதேவ் ஜாதவ் திங்கள்கிழமை புனே வீட்டில் இருந்து காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக அலங்கர் காவல்நிலையத்தில் கேதர் ஜாதவ் அளித்த புகாரின்படி, டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது 75 வயது தந்தை, காலை நடைப்பயணத்திற்காக கோத்ருட் வீட்டை விட்டு வெளியேறி, வீட்டு வளாகத்தின் வாயிலில் இருந்து வெளியேறிய நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. போலீஸாரின் தேடுதலில் முந்த்வா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பாகவும் உடல்நலத்தோடும் தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments