Publish Date: Sun, 15 Aug 2021 (09:45 IST)
Updated Date: Sun, 15 Aug 2021 (09:48 IST)
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் மைதானத்தில் ஏற்படுத்திய களேபரம் வைரலாகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விமரிசையாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் ட்ரா ஆகிவிட்ட நிலையில் இரண்டாவது டெஸ்ட் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் தொடர் நடந்து வந்த நிலையில் திடீரென மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. தானும் இந்திய ஜெர்சி அணிந்திருப்பதால் தன்னையும் டெஸ்ட் தொடரில் விளையாட அனுமதிக வேண்டும் என பாதுகாவலர்களிடம் அவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை பேசி சமாதானப்படுத்தி பாதுகாவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.