Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் கிங்ஸ் பங்குகளை விற்க திட்டமிட்ட சக உரிமையாளர்!? - நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (06:23 IST)

ஐபிஎல் சீசன்களில் பிரபலமான அணியான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பங்குகளை முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான மோகித் பர்மன் விற்க முயன்றதாக ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தை நாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது ஐபிஎல் சீசன்களில் 10 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில் ஐபிஎல் சீசன் தொடங்கியது முதலாக இருந்து வரும் அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ். இதன் உரிமையாளர்களாக மோகித் பர்மன், ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் கரண் பால் ஆகியோர் உள்ளனர். இதில் அணியின் 48 சதவீத பெருவாரி பங்குகள் மோகித் பர்மனிடம் உள்ளன.

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக மெகா ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் தேர்வு குறித்து பஞ்சாப் அணி நிர்வாகத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள மோகித் பர்மன், கணிசமான பங்குகளை விற்க திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனை எதிர்த்து ப்ரீத்தி ஜிந்தா தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மோகித் பர்மன் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்க தடை கோரப்பட்டுள்ளது. ஆனால் எந்த பங்குகளையும் விற்கும் எண்ணம் தனக்கில்லை என மோகித் பர்மன் கூறியுள்ளார். மெகா ஏலம் நடக்க உள்ள நிலையில் இந்த சம்பவத்தால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.டி.உஷா மீது வினேஷ் போகத் பரபரப்பு புகார்.! ஆதரவு அளிப்பது போல் நடித்ததாக குற்றச்சாட்டு..!!

தொடங்கியது செஸ் ஒலிம்பியாட்! தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா? - எதிர்பார்ப்பில் மக்கள்!

தோனி விக்கெட்டை எடுக்க கோலி கொடுத்த ஐடியா… யாஷ் தயாள் பகிர்ந்த தகவல்!

விவாகரத்துக்குப் பின்னரும் பாண்ட்யாவை சீண்டும் நடாஷா…!

ஆஸி அணியில் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் வரிசை என்ன?... பயிற்சியாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments