Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர்: மும்பைக்கு பறந்த சென்னை வீரர்கள்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (10:46 IST)
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி வீரர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
 
இதில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோத உள்ளன. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில வாரமாக சென்னை அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில், வரும் 7-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று மும்பைக்கு சென்றுள்ளனர். அவர்கள் விமானநிலையத்தில் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments