Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

Advertiesment
அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

vinoth

, சனி, 29 மார்ச் 2025 (10:04 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கிளுகிளூப்பைத் தந்தார்.

ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தேவைப்படும் ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே செல்ல விக்கெட்கள் விழுந்தபோது தோனி வருவார், தோனி வருவார் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். ஆனால் அவர் இறங்காமல் அவருக்கு முன்பாக அஸ்வின் இறங்கி அதற்குப் பின்னர் ஒன்பதாவது விக்கெட்டாகதான் தோனி வந்தார். இதன் மூலம் சி எஸ் கே அணியின் வெற்றி வாய்ப்பு அவர் களமிறங்கும்போதே கிட்டத்தட்ட ஜீரோ ஆனது. இது சம்மந்தமாக ‘ஏன் தோனி அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்?” என்ற விமர்சனத்தை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?