Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயரா?

Advertiesment
சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயரா?
, வெள்ளி, 10 மார்ச் 2023 (14:57 IST)
இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியன்று, மைதானம் நிரம்பி வழியும் என்று சென்னை அணியின் சி.இ.ஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த ஸ்டேடியத்தில் புதிதாக இரண்டு கேலரிகள் திறக்கப்பட உள்ளன. அந்த கேலரிகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க 85 ஆண்டுகால பழமைவாய்ந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக போட்டிகள் நடக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபில் தொடரில் தென் ஆப்பிரிக்கா இணைவதில் தாமதம்… பின்னணி என்ன?