Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியால் பல கோடி நஷ்டமடைய போகும் தொலைக்காட்சி – எப்படி தெரியுமா?

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (07:52 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால் சேனல் 7 என்ற தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் இப்போது சில மாற்றங்கள் செய்துள்ளது பிசிசிஐ. அதன் படி ஜனவரி மாதம் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியின் பிரசவத்துக்காக அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில் கடைசி மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ’மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது அதிர்ச்சிதான். ஆனாலும் இந்திய அணி அபாயகரமான அணிதான்.’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கோலி இல்லாததால் டெஸ்ட் போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறையும் என சொல்லப்படுகிறது. அதனால் இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமம் பெற்றுள்ள சேனல் 7 தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் மைதானத்தில் இன்று மழை.. ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி..!

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

அடுத்த கட்டுரையில்
Show comments