3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

Prasanth K
புதன், 9 ஜூலை 2025 (09:40 IST)

காயம் காரணமாக இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாத நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. மேலும் இந்திய அணியின் 8 பொசிஷன்களிலும் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்களை நிரப்பியதும் பலரால் விமர்சிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் பும்ரா ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பதற்காக பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பும்ரா உள்ளே வந்தால் பந்துவீச்சாளரான சிராஜ் அல்லது ப்ரசித் கிருஷ்ணா யாரவது ஒருவர் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

 

கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்ஸிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவர் அணியில் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments