Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் அணியில் ரோஹித் ஷர்மா இல்லை?... கேப்டன் பும்ரா அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் பும்ரா முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.

அதையடுத்து பேட் ஆடவந்த இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்களை இழந்து 57  ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. விராட் கோலி களத்தில் உள்ளார். இந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோஹித்ஷர்மா இடம்பெறவில்லை. அவரின் மோசமான ஆட்டத்திறனே அதற்குக் காரணம்.

இந்நிலையில் புதுக் கேப்டன் பும்ரா இது குறித்து டாஸின் போது பேசுகையில் “எங்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை வைத்தே எங்கள் அணிக்குள் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக கேப்டன் ரோஹித்துக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments