Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற பும்ரா.. நூலிழையில் பின்தங்கிய அஸ்வின்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (07:57 IST)
இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த போட்டி மழை காரணமாக இரண்டரை நாட்கள் பாதிக்கப்பட்டது. மீதமிருந்த இரண்டரை நாட்களில் ஒரு செஷன் மீதமிருக்கும்போதே இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதல். அதிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசினார். இதன் மூலம் அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் 870 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் அவரோடு ஒரு புள்ளி குறைவாகப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மற்றொரு இந்திய வீரரான ரவீந்தர ஜடேஜா ஆறாவது இடத்திலும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments