Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற பும்ரா.. நூலிழையில் பின்தங்கிய அஸ்வின்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (07:57 IST)
இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த போட்டி மழை காரணமாக இரண்டரை நாட்கள் பாதிக்கப்பட்டது. மீதமிருந்த இரண்டரை நாட்களில் ஒரு செஷன் மீதமிருக்கும்போதே இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதல். அதிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசினார். இதன் மூலம் அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் 870 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் அவரோடு ஒரு புள்ளி குறைவாகப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மற்றொரு இந்திய வீரரான ரவீந்தர ஜடேஜா ஆறாவது இடத்திலும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments