Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 ஆம் ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்த பாக்ஸிங் டே டெஸ்ட்!

vinoth
திங்கள், 30 டிசம்பர் 2024 (09:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தின் மூலம் 474 ரன்கள் சேர்த்தது.  பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.  முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸி அணி 263 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து தற்போது இந்திய அணி நான்காவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டி இதுதான் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை இந்த போட்டியில் 2200 பந்துகளுக்கு மேல் வீசப்பட்டுள்ளது. இன்னும் 43 ஓவர்கள் வீசப்படவுள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களுக்கு மேல் நடப்பதில்லை. ஆனால் இந்த போட்டி டெஸ்ட் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments