Publish Date: Sat, 29 Jul 2017 (14:57 IST)
Updated Date: Sat, 29 Jul 2017 (15:00 IST)
விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ வற்புறுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நிர்வாகிகளின் குழு கிரிக்கெட் வீரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பசிசிஐ வலியுறுத்தியுள்ளது. விராட் கோலி தனது ஒஎன்ஜிசி படஹ்வியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது.