வினோதமான முறையில் அடிக்கப்பட்ட சிக்சர்: விவரம் உள்ளே

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (11:44 IST)
நியூசலாந்தில் நடைபெற்று வரும் உள்ளுர் கிரிக்கேட் போட்டி ஒன்றில் வினோதமான முறையில் ஒருசிக்சர் அடிக்கப்பட்டது.
 
போர்டு கோப்பைக்கான 3-வது இறுதிசுற்று ஆட்டத்தில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் பேட் செய்தது. 19-வது ஓவரில் ஜீத் ரவல் பேட் செய்ய, எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் பவுலிங் செய்தார்.
 
அப்போது ஜீத் ரவல் ’லாங்-ஆன்’ திசையில் ஒங்கி அடித்த பந்து பவுலர் ஆண்ட்ரூ எலிஸ் தலையில் பட்டு சிக்சராக மாறியது, இந்த பந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது.
 
இந்த சிக்சரை முதலில் நடுவர் பவுண்டரி என அறிவித்து, பின்பு சிக்சராக மாற்றினார். போட்டியின் முடிவில் ஆக்லாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments