Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியன் கேம்ஸ்களுக்கான மைதானத்தைக் கிண்டல் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட்டர்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:54 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதையடுத்து இப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுப்ரமண்யன் பத்ரிநாத், ஆசியன் கேம்ஸ் போட்டிகளுக்கான கிரிக்கெட் மைதானங்கள் அளவில் மிகச்சிறியவையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பவுண்டரியின் நீளம் 50 மீட்டருக்குக் குறைவாகதான் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதைக் குறிப்பிட்டு நக்கல் செய்யும் விதமாக பத்ரிநாத் “இதுதான் மைதானம் என்றால், நானும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 43 வயதாகும் பத்ரிநாத் சில ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments