Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாதான் சிறந்த அணி.. ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் நம்பிக்கை!

கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாதான் சிறந்த அணி.. ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் நம்பிக்கை!
, திங்கள், 24 ஜூன் 2024 (07:00 IST)
உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதிர்ச்சி முடிவாக ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் சேர்த்தது.

இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்வது சிக்கலாகியுள்ளது. இதையடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஆஸி தோற்று, ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வென்றால் ஆஸி அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

இந்நிலையில் இந்திய அணியுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து பேசியுள்ள மிட்செல் மார்ஷ், “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும். கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாவை விட வேறு சிறந்த அணி இல்லை.” எனக் கூறியுள்ளார். உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழத்திய ஆஸி அணியை பழி தீர்க்க இந்த போட்டி சரியானதாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!