Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்கள்… அப்ப நம்ம நிலைமை?

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (09:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர். இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 185 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு இலக்காக 56 ஓவர்களில் 276 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments