Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்திய ஆஸி பவுலர்!

அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்திய ஆஸி பவுலர்!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:29 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக பேட் செய்த ரோஹித் சதமடித்து அசத்தினார். 120 ரன்கள் சேர்த்த அவர் பேட் கம்மின்ஸ் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 7 விக்கெட்கள் இழந்து 250 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஜடேஜா 45 ரன்களோடு களத்தில் விளையாடி வருகிறார்.

ஆஸி. அணியில் இந்த போட்டியில் அறிமுகம் ஆகியுள்ள இளம் பந்துவீச்சாளரான டாட் மர்பி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த இன்னிங்ஸில் கே எல் ராகுல், அஸ்வின், கோலி, புஜாரா மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதமடித்த பின் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா.. ஆக்ரோஷம் காட்டும் ஆஸி. பவுலர்கள்!