Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறிய அஸ்வின் பேச்சு.. அபராதம் விதித்த பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:16 IST)
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின், இந்த ஆண்டுக்கான சீசனில் புதன்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்த மீறல் நிகழ்ந்தது.

ஐபிஎல் நடத்தை விதி 2.7-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை அஷ்வின் ஒப்புக்கொண்டார். அவரது பேச்சில் “ பனி காரணமாக நடுவர்கள், பந்தை தாங்களாகவே மாற்றினார்கள். எல்லா போட்டிகளிலும் இதுபோல, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின் படி, "ஒரு போட்டியில் நிகழும் ஒரு சம்பவம் தொடர்பான பொது விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து அல்லது எந்த ஒரு வீரர், அணி அதிகாரி, போட்டி அதிகாரி அல்லது எந்த போட்டியில் பங்கேற்கும் அணி, அத்தகைய விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்பட்டாலும்" குறிப்பிடப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments