Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 விக்கெட்களைத் தட்டித் தூக்கிய அஸ்வின்… நியுசிலாந்து நிதான ஆட்டம்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (12:27 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் அதிரடி மாற்றமாக கே எல் ராகுல், சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு, ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்  மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியுசிலாந்து அணி பேட் செய்து வரும் நிலையில் நிதானமாக விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி வருகின்றனர். தற்போது அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. களத்தில் தொடக்க வீரர் டெவோன் கான்வே 60 ரன்களுடனும், ரச்சின் ரவீந்தரா 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

புனே ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியுசிலாந்தின் இரண்டு விக்கெட்களையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர்கள் குறைவான ஓவர்களே பந்துவீசியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டும் சொதப்பல்.. 83 ரன்களுக்கு 5 விக்கெட்! தடுமாறும் இந்தியா!

வார்னருக்கு வாழ்நாள் தடை நீக்கம்! புஷ்பா back on fire! - மீண்டும் கேப்டன் ஆவாரா?

இந்தியா நியூசிலாந்து டெஸ்ட்: டக் அவுட் ஆகி வெளியேறிய ஹிட் மேன்! இந்த போட்டியிலாவது வெல்லுமா?

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை பந்தாடிய இந்தியா..!

தயவு செஞ்சு ரிவ்யூ எடுங்க.. கெஞ்சிய சர்பராஸ் கான்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments