Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்… WTC பைனலில் இடம்பெறாதது குறித்து அஸ்வின் வேதனை!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (14:00 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இப்போது முதல் முறையாக அதுபற்றி பேசியுள்ளார் அஸ்வின்.

ஒரு நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ”நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன், ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். கடந்த இறுதிப் போட்டியில் கூட நான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன், சிறப்பாக பந்துவீசினேன்,

2018-19 முதல், எனது வெளிநாட்டு பந்துவீச்சு அற்புதமாக இருந்தது, மேலும் நான் அணிக்காக கேம்களை வெல்ல முடிந்தது.  போட்டி தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பே நான் அணியில் இருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியவந்தது.

எனவே என்னைப் பொறுத்தவரை, எனது முழு இலக்காக நான் வீரர்களுக்கு உதவியாக இருப்பதை உறுதிசெய்து, பட்டத்தை வெல்ல உதவ வேண்டும் என நினைத்திருந்தேன். ஏனெனில் அணியில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன்." என்று அஷ்வின் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments