Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:33 IST)
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே கருத்தை அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனென்றால் அணிக்குள் அவர் கடந்த சில மாதங்களாக சில அவமானங்களை சந்தித்தார்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதை அஸ்வின் மறுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ஸ்மார்ட் போனின் call log-ஐப் பகிர்ந்து “25 வருடத்துக்கு முன்பு என்னிடம் யாராவது வந்து உன்னிடம் ஸ்மார்ட் போன் இருக்கும். நீ ஓய்வு பெறும் நாளில் உன்னுடைய call log இப்படி இருக்கும் என சொல்லியிருந்தால் என் நெஞ்சே வெடித்திருக்கும்-நன்றி கபில்தேவ் &சச்சின்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments