Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில் 2 வீரர்களுக்கு கொரொனா!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:42 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ள  நிலையில் இலங்கை வீரர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வங்கதேசம் இலங்கை அணிகள் மோதும்.

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா - பாகிஸ்தான், செப்டம்பர் 3ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா - நேபாளம் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.

ஆசிய கோப்பை இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு தொடங்கும் என்று சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடும்   ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில்,   இலங்கை வீரர்களான குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments