Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில் 2 வீரர்களுக்கு கொரொனா!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:42 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ள  நிலையில் இலங்கை வீரர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வங்கதேசம் இலங்கை அணிகள் மோதும்.

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா - பாகிஸ்தான், செப்டம்பர் 3ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா - நேபாளம் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.

ஆசிய கோப்பை இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு தொடங்கும் என்று சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடும்   ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில்,   இலங்கை வீரர்களான குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments