Publish Date: Tue, 25 Apr 2017 (15:00 IST)
Updated Date: Tue, 25 Apr 2017 (16:09 IST)
தனது காதலர் கோலியிடம் தாடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வெகு நாட்களாக தாடியுடன் வலம் வந்துக்கொண்டிருக்குறார். தாடி வைத்திருந்த ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா தற்போது தாடி இல்லாமல் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் கோலி மட்டும் தாடியை எடுக்க மாட்டேன் என சுத்தி கொண்டு இருக்கிறார். இதற்கு காரணம் அவரது காதலி அனுஷ்கா சர்மா தானாம்.
இந்நிலையில் கோலி தாடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் நான் தாடியை ஷேவ் செய்ய தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். காயம் அடைந்த கோலியை பார்க்க அனுஷ்கா சர்மா பெங்களூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.