Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டாஸை ஏமாற்றியதா மும்பை இந்தியன்ஸ்?… கிளம்பியது அடுத்த சர்ச்சை!

vinoth
சனி, 4 மே 2024 (07:10 IST)
கடந்த ஏப்ரல் 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார். அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக ஒரு வீடியோவும் வைரலானது. இது சம்மந்தமான வீடியோ வைரலாகி சர்ச்சைக் கிளம்பியது.

மும்பை இந்தியன்ஸ் அணியினர் ரெப்ரியை விலைக்கு வாங்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டாஸ் போடும் போது டாஸ் காயினுக்கு நேரடியாக கேமரா க்ளோஸ் அப் வைக்கப்பட்டு டாஸின் முடிவு ரசிகர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. அந்த சர்ச்சைக்குப் பிறகு அனைத்துப் போட்டிகளும் அவ்வாறு காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதுபோல காட்டாமல் நேரடியாக ஹர்திக் பாண்ட்யா டாஸ் ஜெயித்ததாக ரெப்ரி அறிவித்தார். இதனால் மீண்டும் டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments