Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி ஓய்வு பற்றி பேசிய அப்ரிடி… இந்திய வீரரின் பதில் இதுதான்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:00 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி ஓய்வு பெறவேண்டும் என ஷாகித் அப்ரிடி பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் கோலியின் கம்பேக் குறித்து அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கோலி தன் ஃபார்மின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “கோலி தன் ஓய்வு பற்றி சிந்திக்கும் காலம். ஒரு சில வீரர்களே தான் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு முடிவை எடுப்பார்கள்.” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா “அன்பிற்குரிய அப்ரிடி, சிலர் ஒருமுறைதான் ஓய்வு பெறுவார்கள். அதனால் விராட் கோலியை இதில் இருந்து விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments