Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவன் கல்யாணை சந்தித்த அம்பதி ராயுடு...மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா?

Sinoj
புதன், 10 ஜனவரி 2024 (21:03 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு. இவர், இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச ஓட்டியில் இருந்து ஓய்வை  அறிவித்த நிலையில், கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

அதன்பின்னர், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் இந்த தொடருடன் ஐபிஎல்லில் இருந்து அம்பத்தி ராயுடு  ஓய்வை அறிவித்தார்.

இதையடுத்து, அவர் என்ன செய்ய போகிறார் என்ற ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த போது,  கடந்த வாரம் அரசியலில் இணைவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது பரப்பாக  பேசப்பட்ட நிலையில், அக்கட்சியில் இணைந்து ஒரு வார காலம் கூட ஆகாத நிலையில் திடீரென தான் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாருமான பவன் கல்யாணை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அம்பதிராயுடு அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments