Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச கிரிக்கெட்டில் நான் முதல் வீரர்: சச்சின் டெண்டுல்கர்

சர்வதேச கிரிக்கெட்டில் நான் முதல் வீரர்: சச்சின் டெண்டுல்கர்
, புதன், 27 ஏப்ரல் 2016 (18:11 IST)
சர்வதேச கிரிக்கெட்டில், மூன்றாம் நடுவரால் வழங்கப்பட்ட முதல் அவுட் எனக்குதான் என்று இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் கூறியுள்ளார்.


 
 
இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சச்சின், கிரிக்கெட் தொழில்நுடபத்துக்கும் தனக்கும் சிறப்பான தொடர்பு ஒன்று உள்ளது என்றார். மேலும் தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்ட சச்சின் 12 வயதில் முதன் முதலாக புனேவிற்குச் சென்று 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மும்பை அணியில் விளையாடிதை கூறினார்.
 
பின்னர் புனேவில் மழையால் ஆட்டம் ரத்தானதை அடுத்து சினிமாவிற்குச் சென்றது, ஊர் சுற்றி எல்லா காசயையும் செலவிட்டது, புனேவில் இருந்து மும்பைக்கு திரும்பிய போது ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல காசு இல்லாமல் நடந்துச் சென்றது, போன்ற மறக்கமுடியாத சில நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
 
மேலும், சச்சின் சர்வதேச அளவில் விளையாட தொடங்கியப் போது சரியான ஸ்பான்சர்கள் கிடையாது, கிரிக்கெட்டில் தொழில்நுடப்பம் அறிமுகம் செய்யப்பட்டப் போது மூன்றாம் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் நான் தான் என்று கூறினார் சச்சின்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலியா? யார்? என்று கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்